ஈராக் சோதனைச்சாவடியில் 14 போலீசார் சுட்டுக்கொலை!!
Read Time:1 Minute, 7 Second
ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் இருந்து சவூதி அரேபியாவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனைச்சாவடி போன்று ஒரு போலியான சோதனை சாவடி அமைத்து தீவிரவாதிகள் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் 14 பேரை அவர்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். சன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் தாக்குதல் நடந்துள்ளதால் இது சன்னி பிரிவு தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஈராக்கில் கடந்த மாதம் மட்டும் சன்னி – ஷியா முஸ்லிம் ஆயுதம் ஏந்திய குழுவினரிடையே நடந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating