அமெரிக்க பெண் கற்பழிப்பு : 3 நேபாளியர்கள் கைது!!
Read Time:1 Minute, 4 Second
அமெரிக்க சுற்றுலாபயணியை கற்பழித்த 3 நேபாள இளைஞர்களை இமாச்சல் பிரதேச மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இமாச்சல் பிரதசே மாநிலத்தில் மணாலி அருகே உள்ள சுற்றுலா மையத்திற்கு வந்திருந்த சுற்றுலா பெண் பயணி ஒருவர் மீண்டும் மணாலிக்கு திரும்பிவந்து கொண்டிருந்தார்.
20வயதுக்குட்பட்ட 3 நேபாள இளைஞர்கள் அவருக்கு உதவி செய்வதாக கூறி பலாத்காரத்தில் ஈடுபட்டு தலைமறைவாகினர் . இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Average Rating