சிறுமி பாலியல் பலாத்காரம் மூன்று குழந்தைகளின் தந்தை கைது!!
வீட்டுக்கு, “டிவி’ பார்க்க வந்த, ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, மூன்று குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களில், 7 வயது சிறுமி, கடைசி பெண். இவர், அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். வளர்மதியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்லதுரை, 38. இவர், டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி, இறக்கும் வேலைக்குச் செல்பவர்.
இவருக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனர். வளர்மதியின் மகளான சிறுமி, அடிக்கடி “டிவி’ பார்க்கவும், விளையாடவும், செல்லதுரை வீட்டுக்குச் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம், அவரது வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீட்டுக்கு வந்த சிறுமி, இச்சம்பவத்தை, தன் தாயிடம் கூறியுள்ளார். அவர், செல்லதுரை வீட்டுக்குச் சென்று சத்தமிட்டுள்ளார்.
பின், மகளை துறையூர் அரசு மருத்துவமனைக்கு, அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அங்கு, திருச்சி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், துறையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறுமியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை, பாலியல் பலாத்காரம் செய்த, செல்லதுரையை கைது செய்தனர்.
Average Rating