சீரற்ற காலநிலையால் உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்வு
Read Time:1 Minute, 7 Second
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளதாக கடல் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் 43 மீனவர்கள் காணமற் போயுள்ளதுடன் 37 படகுகளும் மாயமாகியுள்ளன. காலி, கொழும், பேருவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மீனவர்களின் சடங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் விமானப்படையினரின் உதவியுடன் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Average Rating