திருநங்கையிடம் பாலியல் பலாத்கார முயற்சி: போலீஸ் புகார் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு!!
புதுச்சேரி அருகே, மொபட்டில் சென்ற திருநங்கையை வழிமறித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“நர்த்தகி’ திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்தவர் திருநங்கை கல்கி. புதுச்சேரி, ஆரோவில் பகுதியில், கடந்த ஓராண்டாக வசித்து வருகிறார். இந்தியாவின் முதல் திருநங்கை தொழிலதிபர் என, அழைக்கப்படும் இவர், “சகோதரி’ அமைப்பின் மூலம், திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்.
திருநங்கை கல்கி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2ம் தேதி இரவு, 8:30 மணிக்கு, ஆரோவில் அடுத்த பெரிய முதலியார்சாவடியிலிருந்து, நான் வசிக்கும் கோட்டக்கரை கிராமத்திற்கு, மொபட்டில் சென்று கொண்டிருந்தேன்.
கருவடிக்குப்பம் பாலம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரு வாலிபர்கள், என்னை வழிமறித்து, பலாத்காரம் செய்ய முயன்றனர்.
கும்முன்னுஇ
போராடிய என்னை, வண்டியுடன் கீழே தள்ளிவிட்டு சென்றனர். ஆரோவில் போலீசில் புகார் கொடுத்தேன். புகாரை வாங்க மறுத்து, அலைக்கழித்தனர். திருநங்கையான எனக்கு பாலியல் ரீதியாக அதிக தொந்தரவு உள்ளதால், போலீஸ் பாதுகாப்பு தேவை. இவ்வாறு, அவர் கூறினார்.
Average Rating