டெல்லி பல்கலைக்கழக மாணவி காரினுள் இருவரால் கற்பழிப்பு..!!
டெல்லி காசியாபாத் பகுதியில் ராஜேந்திரா நகரில் வசித்து இளம்பெண் ஒருவர் அக்காவின் வீட்டில் தங்கியபடி டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
இவரது அக்கா சமீபத்தில் பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் பதிவுச் சான்றிதழை பழைய உரிமையாளரிடம் இருந்து வாங்கி வருவதற்காக காரின் டிரைவர் யோகேஷ் என்பவனுடன் நேற்றிரவு அந்த மாணவி சென்றுள்ளார்.
இரவு 8.30 மணியளவில் ஒதுக்குப்புறமான ஒரு பகுதிக்குள் காரை ஓட்டிய யோகேஷ், போகும் வழியில் அவனது நண்பனையும் காரில் ஏற்றிக் கொண்டான்.
பாழடைந்த ஒரு தொழிற்சாலை கட்டிடத்திற்குள் காரை நிறுத்தி அந்த இளம்பெண்ணை காரினுள் வைத்தே இருவரும் கதறக் கதற கற்பழித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து தப்பியோடி வந்த மாணவி நள்ளிரவு 12.30 மணிக்கு செல்போன் மூலம் நடந்த சம்பவத்தை அக்காவிடம் கூறி அழுதாள்.
சம்பவ இடத்திற்கு கணவருடன் விரைந்து வந்த அவர், மாணவியை அழைத்துச் சென்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர் யோகேஷை கைது செய்து அவனது நண்பன் ஆசிப் பற்றிய தகவல்களை விசாரித்து வருகின்றனர்.
Average Rating