பலாங்கொடை நகரில் 3 கடைகளில் கொள்ளை
Read Time:1 Minute, 1 Second
பலாங்கொடை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மதுபானசாலை, பான்ஸ் ரத்வத்த வீதியிலுள்ள மருந்தகம், அருகிலுள்ள மதுபானசாலை ஆகியவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.
இம்மருந்தகத்திலிருந்து பெறுமதிமிக்க பால் மா வகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
அதேவேளை மதுபான சாலையிலிருந்து பணமும் வெளிநாட்டு மதுபான வகைகளும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அவற்றின் பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating