மட்டக்களப்பில் இ.போ.ச பஸ்மீது தாக்குதல்
Read Time:1 Minute, 4 Second
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றுகாலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் குறித்த பஸ்ஸின் சாரதி காயமடைந்துள்ளதோடு, பஸ்ஸின் முன் கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.
இன்றுகாலை வாழைச்சேனையில் இருந்து ஏறாவூருக்கு சென்ற பஸ்ஸின்மீது, கும்புறுமுலை சந்தியில் வைத்து, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயமடைந்த பஸ் சாரதி எம்.ஐ.லத்தீப், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating