தங்க உருண்டைகளை விழுங்கி இந்தியா செல்லவிருந்தவர் கைது
Read Time:1 Minute, 18 Second
36 தங்க உருண்டைகளை விழுங்கி இந்தியாவுக்குப் பயணமாக விருந்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
நீர்கொழும்பு வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தங்கக் கட்டிகளை விழுங்கி வயிற்றுக்குள் ஒளித்து அதனை தமிழ்நாட்டுக்கு எடுத்துச் செல்ல முயன்றதாக சுங்கப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் சம்பந்தப்பட்ட நபரை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே இந்த தங்கக்கட்டிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரி பராகிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
36 தங்க உருண்டைகளினதும் பெறுமதி பற்றி உடனடியாக தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating