வாஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்கு பதில் நியமனம்

Read Time:1 Minute, 36 Second

948vaasகொழும்பு வடக்கு பிரதேசத்திற்கான புதிய பதில் பிரதிகாவல்துறை மாஅதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிகாவல்துறை மாஅதிபர் எஸ்.ஏ.டி.எஸ்.குணவர்தன, பிரதி காவல்து மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு பதிலாக கடமை ஏற்றுள்ளார்.

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதி காவல்து மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் அவர்களின் பதவிகளிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளனர்.

அவர்கள் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் அவர்களது பணிகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது
Next post கொக்காவில் இராணுவ முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட டொக்டர் சிவசங்கர் விடுதலை