தண்டவாளத்தில் தலைவைத்து இளைஞர் தற்கொலை
Read Time:52 Second
பதுளை ஹப்புத்தளை ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
பதுளையிலிருந்து கொழும்புக்கு இரவுநேர தபால் ரயில் சேவையில் பயணித்தபோது நேற்றிரவு 11 மணியளவில் குறித்த இளைஞர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹல்துமுல்லையைச் சேர்ந்த 22 வயதான இளைஞனே தற்கொலை செய்துள்ளதுடன் சடலம் ஹப்புத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Average Rating