கைக்குண்டுடன் சிலாபத்தில் ஒருவர் கைது
Read Time:1 Minute, 3 Second
புத்தளம், சிலாபம், மாதம்பே பகுதியில் வெளிநாட்டில் தயார் செய்யப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 8மணியளவில் அவர் மாதம்பே சுதுவெல்ல தோட்டப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பே சுதுவெல்ல தோட்டப் பகுதியில் உள்ள கடை ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு குழு ஒன்று தயாராவதாக நேற்றிரவு பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மாதம்பே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடமிருந்தே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
Average Rating