நிர்வாணமாக குளித்த பெண்கள் கைது
Read Time:1 Minute, 23 Second
கம்பஹா பகுதியில் போதையில், நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆண்கள் மூவருடன் மேலாடை மட்டுமே அணிந்துக் கொண்டு அரைநிர்வாணத்துடன் குளித்துக் கொண்டிருக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா, கெடவல வெல்ல ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போதே இவர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 18 வயதான பெண்கள் இருவரும் கைது செய்யப்படும் போது போதையில் இருந்ததாகவும் மேலாடை மட்டுமே உடுத்தியிருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார், ரயில் தண்டவாளத்திற்கு அருகில் பிரசித்தமான இடத்தில் இவ்வாறு இருக்க முடியாது என்பதனால் அவர்களை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
Average Rating