சீனாவில் சிறுமிகளை கற்பழித்த கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு தூக்கு
சீனாவில் ஹெனான் மாகாணத்தில், யாங்க்செங்க் நகர கம்யூனிஸ்டு துணைத்தலைவர் பதவி வகித்து வந்தவர் லீ ஸிங்காங்.
இவர் 2011–ம் ஆண்டு 11 சிறுமிகளை கற்பழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரணதண்டனை விதித்துள்ளது.
ஆனால் அவர் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டு அவரது அப்பீல் வழக்கை நிராகரித்து விட்டது. இதையடுத்து அவர் இன்று தூக்கில் போடப்பட்டுள்ளார்.
லீ, சிறுமிகளை கற்பழித்த விவகாரம், சீனாவில் உள்ள ‘வெய்போ’ என்ற வலைத்தளத்தில் பொதுமக்களால் கடுமையாக விவாதிக்கப்பட்டது.
அப்போது ஒருவர், ”கம்யூனிஸ்டு தொண்டர் ஒருவர் எப்படி இருக்கிறார் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இது” என விமர்சித்துள்ளார்.
மற்றொருவரோ, ” இத்தகைய மிருகங்களை என்ன செய்வது? நிர்வாகிகளை நியமிக்கும் போது விரிவான விவாதங்கள் நடத்தப்படவேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.
Average Rating