மாணவி கடத்தப்பட்டு கிருமி நாசினி கொடுத்த சம்பவம்
மட்டக்களப்பு தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலயத்தில் உயர்தர கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவியை இனந்தெரியாத நபர்கள் கடத்திச்சென்று கத்தரிச்செடிக்கு தெழிக்கும் கிருமி நாசினியை பருகக் கொடுத்ததால் பாதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் சித்தாத்துரை ரமேஸ் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலை மாணவியான ராசதுரை சுபாஜினி (17) என்ற மாணவி கடந்த 20ம் திகதி பாடசாலை விட்டு தனது வீடான வேப்ப வெட்டுவான் இலுப்படிச்சேனைக்குச் சென்று கொண்டிருந்த போது காட்டுப்குதியில் வைத்து இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்று கத்திரிச்செடிகளுக்கு தெளிக்கும் கிருமிநாசினியை பருகச் செய்துள்ளனர். இதனால் மாணவி மயக்கமடையவே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
பல மணிநேரம் மயக்கமுற்ற நிலையில் குறித்த இடத்திலேயே கிடந்த மாணவியை கிராம பொதுமக்கள் கறடியனாறு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்பரடைத்துள்ளனர்.
மாணவி வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் வாந்தி எடுத்த போதே அதன்வாசத்திலிருந்து கத்தரிக்குத் தெளிக்கும் கிருமி நாசினி உட்கொண்டது தெரிய வந்துள்ளது.
கறடியனாறு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து அம்பூலன்ஸ் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவி அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவி கற்பழிக்கப்ட்டுள்ளாரா? என்பதை வைத்திய நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
மாணவியிடம் வாக்குமூலம் பெற முடியாதுள்ளது. ஏனெனில் அவர் தொடர்ந்தும் மயக்கநிலையில் உள்ளளதாக தெரியவருகிறது. கறடியனாறு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Average Rating