கசினோவைப் போல பாலியல் வல்லுறவுக்கும் அரசு இடம் ஒதுக்கீடு செய்யும் சரத் பொன்சேகா!!
பாலியல் வல்லுறவுகளுக்காக நாடாளுமன்ற சட்டத்தின்மூலம் விரைவில் பாதை திறக்கப்படும் என ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொல்காஹாவல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வறுமையில் வாடும் நபர்கள் புதுவருடத்திலாவது கள்ளு குடித்து விட்டு, 5 சதத்திற்கு சூதாடும்போது, மறுநாள் சிறையில் இருக்க வேண்டிய நிலைமை உள்ளது. கொழும்பில் தனியான வீதியே கசினோவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சூதாட்டம் நடத்தினாலும் பிரச்சினையில்லை. எது செய்தாலும் பிரச்சினையில்லை.
விரைவில் பாலியல் வல்லுறவுக்காக இந்த அரசாங்கம் வீதியொன்றை ஒதுக்கும். அதற்கும் சட்டத்தை தயாரித்து நாடாளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தில் அதனை நிறைவேற்றும். இதனையடுத்து கொலைகளுக்காக வீதியொன்று ஒதுக்கப்படும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Average Rating