சினிமாவில் எங்களை கேவலப்படுத்துகிறார்கள்! திருநங்கை கல்கி சுப்பிரமணியம்!!(VIDEO)
Read Time:1 Minute, 16 Second
தமிழ் சினிமாக்களில் எங்களை கேவலப்படுத்துகிறார்கள் என்று திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார். கோவை வக்கீல்கள் சங்க கூட்டத்தில் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், இளம் வயதில் ஏற்படும் மாற்றத்தால் நாங்கள், குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, குடும்ப வாழ்க்கையில் இருந்து புறக்கணிக்கப்படுகிறோம்.
பரம்பரையான சொத்தில் பங்கு மறுக்கப்பட்டு, வீட்டை விட்டு துரத்தப்படுவதும் நடக்கிறது. மருத்துவமனைகளில் இக்குறையை நீக்க முறையான சிகிச்சை இல்லை. மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை. தமிழ் சினிமா படங்களில் நடை, உடை, நடிப்புகள் மூலம் நாங்கள் கேவலமாக சித்தரிக்கப்படுகிறோம். இது வேதனை அளிக்கிறது. இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
Average Rating