மாணவிமீது பாடசாலையினுள் பாலியல் வல்லுறவு!!
15 வயதுடைய பாடசாலை மாணவியை பாடசாலையினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேருகெலே, வதுரெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதையுடைய பாடசாலை மாணவியான சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சிறுமியுடன் காதல் தொடர்பினை வைத்திருந்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவராலேயே மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவ தினமான கடந்த 22ஆம் திகதி, பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாக வீட்டைவிட்டுப் புறப்பட்டுள்ள சிறுமி, குறித்த இளைஞனை அப்பிரதேச பாடசாலைக்கு வருமாறு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு அழைத்துள்ளார்.
பின்னர் தனது விருப்பத்திற்கு மாறாக தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு அங்கிருந்து அவ்விளைஞன் தப்பிச் சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக அவரைத் தேடி பொலீசார் வலைவிரித்துள்ளனர்.
Average Rating