மனைவியைக் கொலை செய்த இந்தியருக்கு கனடாவில் ஆயுள் தண்டனை!!
பிரிட்டிஷ் கொலம்பியா: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த இந்தியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா மாவட்டத்தில் உள்ள சர்ரே நகரைச் சேர்ந்த இந்தியர் மன்மீட்சிங். இவரது மனைவி ரவீந்தர் கவுர் பாகு. இவர் அங்குள்ள ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மன்மீட் சிங்குக்கும் அவரது மனைவி ரவீந்தர் கவுர் பாகுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ரவீந்தர் கவுர் பாகு தனது தோழி ஒருவரின் வீட்டில் வசித்து வந்தார்.
தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், மன்மீட்சிங், பாகுவை தன்னுடன் வாழ வருமாறு தொடர்ந்து அழைத்து வந்தார். ஆனால் பாகு மறுத்து வந்தார். இதையடுத்து, பாகு வேலை செய்யும் பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார் மன்மீட் சிங். அப்போதும் பாகு மறுத்ததால், ஆத்திரமடைந் மன்மீட் சிங், பத்திரிகை ஊழியர்கள் முன்பு தனது மனைவியை 30 முறை கத்தியால் குத்தினார். இதில் பாகு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து மன் மீட்சிங்கை கைது செய்த போலீசார், பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, மன்மீட் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், 16 ஆண்டுகள் இவரை பரோலில் விடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating