கிளிநொச்சி மாணவர்களின் திறமைகளை உலகுக்கு காட்டிய பாரிய கல்விக் கண்காட்சி !!(PHOTOS)
Read Time:1 Minute, 22 Second
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையை மேம்படுத்த வேண்டும், இம்மாவட்ட மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர்தல் வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் இராணுவத்தின் நல்லெண்ண முயற்சியாக பிரமாண்ட கல்விக் கண்காட்சி ஒன்று இங்கு நடத்தப்பட்டுள்ளது.
இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். வடமாராட்சியில் இருந்து 25 மாணவர்கள் இக்கண்காட்சியை பார்வையிட வந்து இருந்தனர்.
இக்கண்காட்சி உண்மையிலேயே மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாக அமைந்ததோடு. எதிர்காலத்தில் விஸ்தரிக்கப்பட்டு பல இடங்களிலும் இக்கண்காட்சி நடத்தப்பட வேண்டும்.இவை வட மாகாணத்தின் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் மாணவர்களுக்கு புதிய அனுபவங்களை கொடுக்கின்றன. உதாரணமாக இன்றைய கண்காட்சி வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான உறவுப் பாலமாக அமைந்தது.
Average Rating