ஓடும் பஸ்ஸில் பாய்ந்து ஏறியவர் பின் சில்லுக்குள் நசுங்கிப் பலி!!

Read Time:1 Minute, 39 Second

Church-Bus2ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸின் முன்கதவின் வழி யாக ஏற முயற்சித்த நபர் கீழே விழுந்து அதே பஸ்ஸின் பின் சில்லில் சிக்கி நசுங்கி மரணமான கோரச் சம்பவமொன்று மஹியங்கணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பஸ்ஸிலேயே மஹியங்கணையில் வைத்து மேற்படி நபர் ஏற முயற்சித்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த வீரசேகரகே நந்திம சுதர்ஷன என்பவராவார். மஹியங்கணையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸிற்காக காத்து நின்றிருந்த மேற்படி நபர் பஸ் தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு முன்பாகவே ஓடிச் சென்று அதில் ஏற முற்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்தார்.

பஸ்ஸின் பின் சில்லில் நசுங்குண்டு குற்றுயிருடன் மீட்கப்பட்ட நபர் மஹியங்கணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழ ந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணை க்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூடி மறைத்தாலும் நல்ல மூடு வருவது நிச்சியம் !! (வீடியோ)
Next post சிங்கள தேசத்தில் இருந்து பாலிவூட்டுக்கு பறந்த கிளி !!(PHOTOS)&(VIDEO)