மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்தவர் கைது!!
Read Time:1 Minute, 6 Second
தனது மகனுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு, தானும் குடித்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
42 வயதான குறித்த நபர் நேற்றையதினம் (30) தனது ஆறு வயது மகனை பலவந்தமாக விஷத்தை குடிக்க வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவரது மனைவி மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர் தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தங்காலை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating