யானையின் பிடியில் சிக்கி தப்பிய நபர்!!

Read Time:5 Minute, 31 Second

1112image001இந்­தி­யாவின் பெங்­க­ளூரி­லுள்ள காடொன்றில் யானையின் கோரப் பிடியில் சிக்­கிய நபர் ஒருவர் மயி­ரி­ழையில் உயிர்­பி­ழைத்த அரிய சம்­ப­வ­மொன்­றினை புகைப்­ப­ட­வி­ய­லாளர் ஒருவர் முழு­மை­ய­மாக படம்­பி­டித்­துள்ளார். விஜய கர்நாடகா பத்திரிகையைச் சேர்ந்த புகைப்­ப­ட­வி­ய­லா­ளா­ரான கே.எஸ்.ஸ்ரீதர், பெங்­க­ளூருக்கு வெளி­யி­லுள்ள கிராமப் புறத்­தி­லுள்ள காடொன்­றுக்கு சென்று பட­மெ­டுக்கும் போதே மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. காட்­டிற்குள் அற்­பு­த­மான படங்­களை எடுக்கும் எண்­ணத்தில் யானைகள் இருக் கும் அபா­ய­க­ர­மான எல்­லைக்குள் உள் ளூர் வாசி­களும் ஸ்ரீதரும் நுழைந்­தனர். இதன்­போது அங்கு வந்த யானை சேகரை துரத்­தி­யது. அவரும் உயிரைக் காப்­பாற்­றிக்­கொள்ள உத­விகள் எது­மின்றி ஓடினார்.

ஆனால் திரும்பிப் பார்த்­த­போது தன்­னுடன் வந்த மணி­ரா­ஜுவை பெண் யானை­யொன்றின் பிடியில் சிக்­கி­யி­ருப்­பதை கண்ட பீதி­யீட்டும் சம்­ப­வத்தை மீட்­டினார் புகைப்­ப­ட­வி­ய­லாளர் ஸ்ரீதர். இந்த சம்­பவம் குறித்து அவர் மேலும் கூறு­கையில், ‘நான் உள்ளூர் கிரா­ம­வாசி ஒரு­வ­ருடன் நட்­பாக இருந்தேன். அவரே என்னை காட்­டுக்குள் அவ­ரது மோட்­டார் சைக்­கிளில் ஏற்றிச் சென்றார். காலை 10.30 மணி­ய­ளவில் ஹஸ்கர் ஆற்­றினை அடைந் தோம். அங்கு ஏற்­க­னவே பலர் குழு­மி­யி­ருந்­தனர். காட்­டிற்குள் சென்­றதும் அங்கு யானைகள் மரத்தின் பின்னால் இருப்­பதை நான் அறிந்­து­கொண் டேன். அத்­துடன் அனை­வ­ரை யும் கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளையும் நிறுத்தக் கேட்­டுக்­கொண்டேன்.

ஏனெனில் யானை கள் சிறிய சத்­தங்­க­ளையும் உண­வ­ரல்­லன. மேலும் 30 அடி தூரத்தில் 12ற்கும் அதி­க­மான யானை­க­ளையும் கண்டேன். இந்­நி­லையில் கைய­டக்கத் தொலை­பே­சியின் ஓசை கேட்க அங்கு பேணப்­பட்ட அமைந்து சீர்­கு­லைந்­து­விட்­டது. ஆனால் தொடர்ந்தும் நான் பட­மெ­டுத்­துக்­கொண்டே இருந்தேன், இதன்­போது சத்­த­தினால் விரை­வாக யானைகள் நாங்கள் இருந்த திசையை நோக்கி நகர்ந்தை என்னால் அவ­தா­னிக்க முடிந்­தது. அப்­போது நான், ஆபத்தை எதிர்­கொண்டு பட­மெ­டுப்­பதா அல்­லது ஓடு­வதா என இரண்டு மன­நி­லையில் இருந்தேன். பின்னர் சில படங்­களை வரி­சை­யாக எடுத்­த­வாறு பட­மெ­டுப்­பதை நிறுத்­தினேன். அது­வ­ரையில் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை. ஆனால் மணி­ராஜு என்­பவர் யானை­யிடம் மாட்­டிக்­கொண்டார். அவர் ஓடிக் களைப்­ப­டைந்து யானையின் தும்­பிக்கை பிடியில் அகப்­பட்­டுக்­கொண்டார். அத்­துடன் மணி­ரா­ஜுவின் கதை முடிந்­தது என நினைத்தேன். பள்­ள­மொன்றில் இறங்­கிய யானை சற்று நிலை தடு­மாறியது. எப்­ப­டியோ யானை தனது தும்­பிக்­கையின் பிடியை தளர்த்த மணி­ராஜு கீழே வீழ்ந்தார். என் கண்­களை என்னால் நம்­ப­மு­டி­ய­வில்i.

அதன் பின்னர் வேறு சில­ருடன் இணைந்து நான் சத்­த­மிட்டேன். கிரா­ம­வா­சி கள் யானை மீது கற்­கனை வீசி பய­மு­றுத்த அது அங்­கி­ருந்து சற்றே நகர்ந்­தது. அதன்பின் கிரா­ம­வா­சிகள் ஓடிச்­சென்று மணி­ரா­ஜுவின் உடலில் உயிர்; இருக்­கி­றதா என பார்த்­தனர். அவர் உணர்­வின்றி இருந்­தாலும் உயி­ருடன் இருந்தார். அவரை வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பினோம்’ பின்னர் பட­மெ­டுப்­பதா அல்­லது மணி­ரா­ஜுவின் உயிரைக் காப்­பாற்­று­வதா என்­பதில் மணி­ரா­ஜுவைக் காப்­பாற்­றவே விரை­வாக தீர்­மா­னித்தேன். பின்னர் கிரா­ம­வா­சி­களின் உதவியுடன் யானையை விரட்டி மணிராஜு உயிருடன் மீட்கப்பட்டார்’ என்றார். சுமார் 5 நிமிடங்களில் மணிராஜு மரணத்தின் விளிம்புக்குச் சென்று திரும்பிய இச் சம்பவத்தை தனது கெமராவில் பதிவு செய்துகொண்டு வாழ்நாள் புகைப்படங்களுடன் திரும்பியுள்ளார் கே.எஸ்.ஸ்ரீதர்.
1112image002

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒவ்வொரு இலக்கத்தையும் குறிபார்த்து அடித்தால் ஒரு உறுப்பு தெரியுமாம் !! (வீடியோ)
Next post தயா மாஸ்டர், தமிழினி, கே.பி விண்ணப்பம்!!