தயா மாஸ்டர், தமிழினி, கே.பி விண்ணப்பம்!!
முன்னாள் புலி முக்கியஸ்தர்களான கே.பி என்கிற செல்வராசா பத்மநாதன், தமிழினி என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி மற்றும் தயா மாஸ்டர் என்கிற வேலாயுதம் தயாநிதி ஆகியோர் வடமாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் விண்ணப்பித்துள்ள போதிலும் கட்சி வேட்பாளர் நியமனக்குழு முன்னிலையில் இவர்கள் தோன்றவேண்டியிருக்கும் என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த மூவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றங்கள் எதுவும் இவர்களை குற்றங்காணவில்லை.
எனவே, வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் செய்துள்ள விண்ணப்பங்களை கருத்தில் எடுக்காமல் விடுவதற்கான காரணமெதுவுமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இவர்கள், சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து ஒரு கட்சியின் அங்கத்துவத்தை பெறவேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Average Rating