மாணவனைக் காணவில்லையென முறைப்பாடு!!
நுவரெலியா ஹட்டன் பன்மூர் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி பயிலும் 14 வயது மாணவனை கடந்த புதன்கிழமையிலிருந்து காணவில்லை என பெற்றோர்களால் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழரசன் அஜித்குமார் என்ற பெயருடைய இந்த மாணவன் கடந்த புதன்கிழமை ஹட்டன் நகருக்கு வந்துள்ளார்.
இவரை அவதானித்த உறவினர் ஒருவர் தாய்க்கு தொலைபேசியில் விடயத்தை கூறியுள்ளார். அவ்விடத்திற்கு வந்த இவரது தாய் இவரை அழைத்துக்கொண்டு செல்லும் வழியில் ஒரு கடையில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருக்கும்போது மேற்படி மாணவன் தலைமறைவாகியுள்ளார்.
இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகாமையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கும்படி ஹட்டன் பொலிஸார். கேட்டுள்ளனர் தகவலறிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றோருக்கும் அறிவிக்குபடி கேட்கப்பட்டுள்ளது. 0776933691, 0514906652.
Average Rating