கெஹெலியவின் மகனுக்கு உறக்கத்தில் நடக்கும் வியாதி!!
தனக்கு உறக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக ஊடக அமைச்சரின் மகனும், இலங்கை கிரிக்கட் அணியின் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சிறு வயது முதலே தூக்கத்தில் நடக்கும் வியாதி இருந்தது. உறக்கத்தில் இருந்த போதே விமானத்தின் கதவினை திறக்க முயற்சித்தேன், குடிபோதையில் அல்ல.
சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முதல் நாள் தூக்கம் விழித்திருந்தோம். நடு வானில் விமானத்தின் கதவுகளை திறக்கும் அளவிற்கு நான் எருமை மாடு கிடையாது. எனது உடலில் அல்ஹகோல் இருக்கின்றதா இல்லையா என்பதனை பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்க முடியும்.
வெளிநாட்டவர்களுக்கு அமைச்சரின் மகன் என்பது முக்கியமில்லை. குடிபோதையில் இவ்வாறு விமானத்தின் கதவுகளை திறந்திருந்தால் அவர்கள் சும்மாயிருந்திருக்க மாட்டார்கள். இது தொடர்பில் பிரித்தானிய விமானசேவை நிறுவனம் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது என ரம்மித் ரம்புக்வெல்ல சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
Average Rating