கண்டி பஸ்ஸினுள் பெண்ணொருவரின் கால்களுக்கிடையில் செல்போன் கமராவை வைத்தவர் கைது !!
Read Time:1 Minute, 19 Second
கண்டி மஹியங்களை பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரது அந்தரங்க அவயவங்களை தனது கையடக்க தொலைபேசி மூலம் படம் பிடித்ததாகக் கூறப்படும் இனைஞர் ஒருவரை கண்டி பொலீஸார் (இன்று 2013 07 02)கைது செய்துள்ளனர்.
இது பற்றித் தெரிய வருவதாவது-
கண்டி – மஹியங்கனை பஸ் வண்டியில் பயணித்த குறித்த பெண்ணின் கால்களுக்கு கீழே கையடக்க தொலை பேசியை இரகசியமாக வைத்து இவ் இளைஞன் இப் பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களைப் படம் பிடித்துள்ளதாக பொலீஸாருக்கு அப் பெண் தெரிவித்ததை அடுத்து சந்தேகநபர் கைதாகியுள்ளார்.
பொலீஸார் மேற்கொண்ட முதற் கட்ட விசாரணைகள் மூலம் அது தெரிய வந்துள்ளதாகவும் கண்டிப் பொலீஸார் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக குறித்த பெண் 119 பொலிஸ் அவசரபிரிவிற்கு அறிவித்தன் பின்னரே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலீஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்
Average Rating