ஒன்றரை வயது குழந்தைமீது பாலியல் துஷ்பிரயோகம்!!

Read Time:1 Minute, 47 Second

sad-baby18 மாத பெண் குழந்­தை­யொன்­றுக்கு விளையாட்டுக் காட்­டியே சைக்­கிளில் அழைத்துச் சென்று வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வ­மொன்று குளி­யாப்­பிட்டி பகு­தி­யி­லுள்ள இலுக்­ஹேன என்­னு­மி­டத்தில் இடம் பெற்­றுள்­ளது. 27 வய­து ­டைய ஒரு பிள்­ளைக்கு தந்­தை­யான நபரே இவ்வாறு நடந்துள்ளார். பிள்­ளை­யுடன் அன்­பாக இவர் பழ­கி­யதன் கார­ண­மா­க குழந்­தையின் பெற்றோர் குழந்­தையை அழைத்துச் சென்­ற­போது எதுவும் கூற­வில்லை.

இச் சம்­பவம் வெளியே தெரியவரவே இந்நபர் தலை­ம­றை­வாகி வாழ்ந்து வந்தார். இச்­சந்­தேக நபர் புத்­தளம் பகுதியிலுள்ள மங்­க­ள­வெளி என்­னு­மிடத்­தி­லுள்ள மறிச்­சுக்­கட்டி என்னும் கிரா­மத்­திற்கு வந்து ஒரு குழந்தைக்கு தாயான பெண்­ணொ­ரு­வரை திரு­மணம் செய்து வாழ்ந்து வருவதும் தெரியவந்துள்ளது.

இவ்விடயம் முந்தல் பொலி­ஸா­ருக்கு தெரி­ய­வ­ரவே பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி பிரசாத்மானவ தலை­மையில் சென்ற பொலிஸ் குழு சந்­தேக நபரைக் கைதுசெய்­துள்ளது. கைது செய்­யப்­பட்­டவர் குளி­யாப்­பிட்­டிக்கு கொண்டு செல்­லப்­பட்டு, குளி­யாப்­பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எகிப்தில் போராட்டத்தை பதிவு செய்ய சென்ற பெண் நிருபர்மீது பலாத்காரம்!!
Next post அமெரிக்காவில் விலைமாதுகளுடன் அல் கொய்தா தலைவர் உல்லாசம்!!