13 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி கொள்ளையிட்ட ஆசாமி!!
இந்தியாவில் 13 பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் பணம், நகைகளை கொள்ளையிட்ட ஆசாமி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஜெய்ப்பூர், ஷ்யாம் நகரில் கேரளாவைச் சேர்ந்த ரீட்டா வசித்து வருகிறார். இவருக்கும், கோயம்புத்தூரைச் சேர்ந்த கிருஷ்ண வெங்கடேஷின் மகன் நாகராஜ் என்பவனுக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில் ரீட்டா தன் கணவன் மீது கடந்த மாதம் 12ம் திகதி, பொலிசில் புகார் கொடுத்தார். அதில், தன்னை திருமணம் செய்துள்ள நாகராஜ், 50 இலட்சம் ரூபாய் வாங்கி, கோவாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாகக் கூறியிருந்தார்.
வழக்கு பதிவு செய்த பொலிசார் மும்பையில் இருந்த நாகராஜை, கைது செய்தனர்.
அவனிடம் பொலிசார் விசாரணையில், ரீட்டா மட்டுமின்றி, பல நகரங்களில், பல பெயர்களில், பல பெண்களை திருமணம் செய்து, நாகராஜ் ஏமாற்றியுள்ளான் எனத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் அங்குள்ள பொலிசில் புகார் அளித்துள்ளனர். மும்பை, அந்தேரி, பெங்களூரு, அரியானா, டெல்லி, உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த, 13 பெண்களை, திருமணம் செய்துள்ள அவன் அவர்களிடம் இருந்து பணம், நகைகளை கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Average Rating