யாழ். கோவிலில் தங்கச் சங்கிலி கொள்ளையிட முயற்சித்த பெண்களுக்கு விளக்கமறியல்!!
Read Time:1 Minute, 0 Second
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பிரதேசத்தில், கோவிலில் தங்கச் சங்கிலி கொள்ளையிட முயற்சித்த நான்கு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கைதான நான்கு பெண்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் 3 பவுன் மற்றும் 2 பவுன் பெறுமதியான தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.
இவற்றின் பெறுமதி 5,20,000 ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating