ஹ்ரித்திக் ரோஷனின் கருணை உள்ளம்!!

Read Time:2 Minute, 33 Second

actgal4080இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில் சென்ற மாதம் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்தனர்.

இவர்களின் துயர் தீர்க்க அரசு தரப்பும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஏராளமான உதவிகள் புரிந்து வருகின்றன.

இந்நிலையில், அவர்களுக்கு உதவ நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாக ஹிந்தி நடிகர் அமீர்கான் தனது எண்ணத்தை வெளியிட்டார். இதை அறிவித்தவுடனேயே திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரிடம் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளனர். அமீர்கான் உத்தரகாண்ட் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த மற்றொரு நடிகரான ஹ்ரித்திக் ரோஷனும் உத்தரகாண்ட் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுக்க முன்வந்துள்ளார்.

இதற்கான காசோலையை தன்னுடைய உதவியாளர் மூலம் கொடுத்து ‘தூம்-3’ படப்பிடிப்பில் இருந்த அமீர்கானிடம் நேரடியாக கொடுக்குமாறு கூறியுள்ளார்.

மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்ததால் தன்னால் அமீர்கானிடம் நேரிடையாக கொடுக்க முடியவில்லை என்று ஹ்ரித்திக் ரோஷன் கூறியுள்ளார்.

மேலும், நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்யவேண்டும். இந்த செயல் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். நாம் செய்யும் உதவிகள் தெரிந்து மற்றவர்களும் இந்த எண்ணத்தினை பின்பற்றுமாறு செய்யவேண்டும். உலகில் நடைபெறும் கெட்ட செயல்களில், நன்மை தரும் செயல்கள் மறைந்து விடக்கூடாது. என்னுடைய உதவும் எண்ணத்தை தூண்டிய அமீர்கானுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறுதி வரை போராடி ஒரு விக்கெட்டால் சம்பியன் ஆனது இந்தியா!!
Next post டெல்லி மாணவி பலாத்கார வழக்கு : சிறுவனும் குற்றவாளியே!!