கார்த்தி-நஸ்ரியா ஜோடியின் பட சிக்கல்…?!

Read Time:2 Minute, 36 Second

download

நேரம்’ பட நாயகி நஸ்ரியாவுக்கு கோலிவுட்டில் இப்போது நல்லநேரம்… அறிமுக படம் ஹிட் ஆகி இன்னமும் ஓடிக் கொண்டிருப்பதால் நஸ்ரியா கைவசம் ஏகப்பட்ட படங்கள். கால்ஷீட் டைரி நேரம் குறிப்பிட முடியாமல் நிரம்பி வழிகிறது.

‘திருமணம் என்னும் நிக்ஹா’, ‘நையாண்டி’, ‘ராஜா ராணி’ என வரிசையாக படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தாய் மொழியான மலையாளத்திலும் மம்முட்டி மகன் துல்கர்சல்மான் ஜோடியாக நடிக்கிறார்.
இத்தனை பிசியாக இருந்தாலும் வரும் வாய்ப்புகளை மிஸ் பண்ணுவதே இல்லை. கார்த்தி நடிப்பில் ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கும் புதிய படத்திலும் நஸ்ரியாதான் கதாநாயகி. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
வடசென்னை பகுதியில் கபடி ஆடும் வீரர்கள் பற்றிய கதை என சொல்கிறார்கள். கதைவிவாதம் முடிந்துள்ள நிலையில் ரஞ்சித் இயக்கப்போகும் கதை எனக்கு சொந்தமானது என்கிறார் ‘கருப்பர் நகரம்’ படத்தின் இயக்குனர் கோபி.

”வடசென்னையில் கால்பந்து ஆடும் வீரர்கள் பற்றிய கதையை நான் படமாக்க திட்டமிட்டிருந்தேன். இப்போது அந்த கதை தெரிந்த ரஞ்சித் கால்பந்துக்கு பதில் கபடியை மையப்படுத்தி எடுக்கப்போவதாக கூறுகிறார்கள். அப்படி என் கதையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அதை மீட்கும் வழியை தேடுவேன்’ என்கிறார் இயக்குனர் கோபி.

கோலிவுட்டில் இப்போது அடுத்தவர் கதைகளை காப்பி அடிக்கும் சீசன் போல… பிரபல இயக்குனர்கள் இருவருக்கும் இடையில் இப்போதுதான் கதை திருட்டு விவகாரம் இயக்குனர்கள் சங்கம்வரைக்கும் புகாராக போய் பஞ்சாயத்து பேசி முடித்தார்கள்.
இப்போது புதிய புகார் எழும்பியுள்ளது…. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை பிட்டத்தில் அடிக்குமாறு கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்!!
Next post சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை ‘கதாநாயகி கமலா’ என்ற பெயரில் இயக்கி வருகிறார் – வேலுபிரபாகரன்..!!