சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை ‘கதாநாயகி கமலா’ என்ற பெயரில் இயக்கி வருகிறார் – வேலுபிரபாகரன்..!!
தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என பல மொழிகளில் தனது காந்தக் கண்களால் ரசிகர்களை மயக்கி அடிமைபடுத்தி வைத்திருந்தவர் சில்க்ஸ்மிதா. அவரை ‘சிலுக்கு’ என அழைப்பதையே ரசிகர்கள் விரும்பினார்கள். அந்தளவுக்கு பேர் பெற்றவர் திடீரென ஒரு நாள் இறந்து போனார். அது தற்கொலையா… கொலையா என்ற விவாதம் இன்றளவும் நடந்து வருகிறது. அவர் இறந்து போனாலும் அவரைச் சுற்றியே திரைத்துறையில் பல விஷயங்கள் நடந்து வருகிறது. இறந்தாலும் மவுசு குறையாத மர்லின்மன்றோ போல இந்திய சினிமாவில் சில்க் இடம்பிடித்திருக்கிறார் என்றே கூறுகிறார்கள்.
ஏற்கனவே, சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கையை ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் இந்தியில் வெளியாகி பல கோடி வசூலை வாரிகுவித்தது. அதில் சில்க் ஆக வித்யாபாலன் நடித்திருந்தார். அதற்காக தேசிய விருதும் பெற்றார்.
அதைத் தொடர்ந்து மலையாளத்தில் சில்க் வாழ்க்கையை ‘கிளைமாக்ஸ்’ என்ற பெயரிலும், அதையே தமிழில் ‘நடிகையின் டைரி’ என டப்பிங் செய்தும் வெளியிட்டார்கள்.
இந்த சூழலில், காமம் ஒரு விஷயமே இல்லை. ஆண்களுக்கு சமமாக பெண்களும் மேலாடை இல்லாமல் நடக்கலாம். செக்ஸ் சுதந்திரம் பெண்களுக்கும் வேண்டும் என பல சர்ச்சை கருத்துக்களை முன் வைத்து ‘காதல் அரங்கம்’ என்ற படத்தை வேலுபிரபாகரன் இயக்கியிருந்தார். இதில் பெங்களூரைச் சேர்ந்த ஷெர்லி என்ற பெண் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த வேலுபிரபாகரன் இப்போது சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை ‘கதாநாயகி கமலா’ என்ற பெயரில் இயக்கி வருகிறார். கதை,திரைக்கதை,வசனத்தை வேலுபிரபாகரன் எழுதினாலும் படத்தை இயக்குவது அவரின் உதவியாளர் ஜோதிமுருகன் என்பவராம். சில்க்ஸ்மிதா ‘வண்டிச்சக்கரம்’ மூலம் அறிமுகம் ஆன நாளில் இருந்தே வேலுபிரபாகரனுடன் நல்ல நெருக்கத்தில் இருந்தாராம். பல ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வசித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இதற்கு முன்வந்த சில்க்ஸ்மிதாவின் கதைகளில் தனது கதாபாத்திரம் மறைக்கப்பட்டதை வெளியே கொண்டு வருவதற்காகவும் இந்த படத்தை அவரே எடுக்கிறாராம். மங்களூரைச் சேர்ந்த வனிதா என்ற பெண்ணை அழைத்து வந்து சில்க் ஆக நடிக்க வைக்கிறார். இந்த படத்தின் மூலம் சில்க் வாழ்க்கையில் நடந்த பல ரகசியங்களை வெளிச்சம் போட்டுகாட்டயிருக்கிறேன் என்கிறார் வேலுபிரபாகரன்.
Average Rating