சிசுவை வயலில் வீசிய பெண் தடுப்புக் காவலில்..!!

Read Time:2 Minute, 0 Second

1 அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் பிரிவில் சிசுவொன்றை வயலில் வீசிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் 11ஆம் இலக்க குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண், கடந்த 13ஆம் திகதி இரவு சிசுவைப் பிரசவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாகக் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார், உயிரிழந்த நிலையில் வயலில் இருந்து சிசுவின் உடலை நேற்று கண்டெடுத்ததுடன் அதன் தாயாரையும் கைது செய்துள்ளனர். திருமணமாகாத 30 வயதான பெண் ஒருவரே இரகசியமாக குழந்தையைப் பிரசவித்த பின்னர் வயலில் வீசியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தப் பெண் பொலிஸ் பாதுகாப்புடன் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த சிசுவின் சடலமும் அதே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியா – அம்மிவைத்தான் பகுதியில் பிறந்து ஒரு நாள் நிரம்பிய சிசுவொன்றை நிலத்தில் புதைத்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிசுவின் தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘உங்க கதைக்கு இவர்தான் ஹீரோ…!’ – கோலிவுட் ஹீரோக்களை நறநறக்க வைக்கும் சந்தானம்..!!
Next post பாடசாலை மாணவி கடத்தப்பட்டு மீட்பு – இளைஞர் கைது…!!