காதல் ஜோடிகளின் ரீ சேர்டில் புத்த பெருமானின் உருவம்..!!
அணிந்திருந்த மேலங்கியில் புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டி ருந்ததால் திருகோணமலை புகையிரத நிலையத்தில் வைத்து இரு வெளிநாட்ட வர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றள்ளது.
ரயில் நிலையத்தில் பயணிக்கவிருந்த பெரும்பான்மை இன மக்களின் கோரிக்கையை அடுத்தே இவர்கள் இருவரும் பொலிஸாரினால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப் பட்டனர். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவ தாவது,
திருகோணமலை ரயில் நிலையத்தில் பொலிவியா நாட்டைச் சேர்ந்த இளைஞன் தனது பெண் நண்பியுடன் கொழும்பு செல்வதற்காக காத்திருந்துள்ளார். அவர்கள் இருவரும் அணிந்திருந்த ரீசேர்ட்டில் புத்தர் பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இதனை அவதானித்த சக பிரயாணிகள் இவர்களிடம் சென்று அணிந்திருந்த ரீ சேர்ட்டினை கழற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.
மொழி புரியாத இந்த வெளிநாட்ட வர்களால் இதனை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு குழுமியவர்கள் அவர்களின் செயற்பாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
சம்பவத்தையடுத்து புகையிரத நிலைய பொலிஸ் அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டதைத் தொடர்ந்து ரீ சேர்ட் கழற்றப்பட்டதுடன், வெளிநாட்டவர்கள் இருவரும் விசாரணைக்காக திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Average Rating