இன்றும் நாளையும் நடைபெறும் உலக உதைபந்தாட்டப் போட்டிகள்
18-வது உலககோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் `ஏ’ பிரிவில் உள்ள ஈக்வடார்-கோஸ்டாரிகா , `பி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து-டிரினிடாட் , சுவீடன்-பராகுவே அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை போட்டி யின் 8-வது நாளான நாளை நடை பெறும் தொடக்க ஆட்டத்தில் `சி’ பிரிவில் உள்ள அர்ஜென் டினா- செர்பியா அணிகள் மோதுகின்றன. 1978-ம் மற் றும் 1986-ம் ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஐவரி கோஸ்டை தோற்கடித்து இருந்தது.
புதுமுக அணியான செர்பியா முதல் ஆட்டத்தில் 0-1 என்ற கணக்கில் ஆலந்திடம் தோற்று இருந்தது. நடுகளம், முன் களத்தில் சிறந்து விளங்கும் அர்ஜென்டினா அணிக்கு 2-வது வெற்றி வாய்ப்பு உள்ளது. செர்பியா அணி வீரர்கள் தாக்கு பிடித்து ஆடுவார்களா என்பது கேள்விக்குறியே.
ஆனால் அதே நேரத்தில் அந்த அணி ஆலந்திடம் 1 கோல் மட்டுமே வாங்கி தோற்று இருந்தது. இதனால் எளிதில் தோற்கடிக்க முடியாத வகையில் போராடுவார்கள்.
ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிரஸ்போ, சவியோலா ஆகியோர் கோல் அடித்தனர். சிறந்த முன்கள வீரரான லையோனல் மெஸ்ஸிக்கு முதல் ஆட்டத்தில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தற்போது பயிற்சியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் நாளைய ஆட்டத்தில் ஆடுவது உறுதியாகவில்லை. ஜுயன் நிக்குலிமி அந்த அணியின் நம்பிக்கை வீரராக உள்ளார்.
அர்ஜென்டினாவின் பின்களம் பலவீனமாக உள்ளது. ஐவரிகோஸ்ட் அணிக்கு எதிராக இதை காண முடிந்தது. நாளைய ஆட்டத்தில் அர்ஜென்டினா வெற்றி பெறும் பட்சத்தில் 2-வது சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி நடக்கிறது.
இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஆலந்து-ஐவரி கோஸ்ட் மோதுகின்றன. ஆலந்து அணிக்கு எல்லா வகையிலும் புதுமுக அணியான ஐவரி கோஸ்ட் ஈடுகொடுக்கும். இரவு 9.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறும்.
`டி’ பிரிவில் நடை பெறும் ஆட்டத்தில் மெக்சிகோ-அங்கோலா அணிகள் மோதுகின்றன. இதில் மெக்சிகோ வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 3-1 என்ற கணக்கில் ஈரானை வென்று இருந்தது. அங்கோலா முதல் ஆட்டத்தில் 0-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கல்லிடம் தோற்றது.