மீண்டும் போலீஸ் வேடத்தில் சூர்யா..!!

Read Time:1 Minute, 57 Second

images (18)

சூர்யா போலீஸ் வேடத்தில் நடித்த காக்க காக்க, சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்கள் எல்லாமே ஹிட் என்பதால் இப்போது போலீஸ் வேடம் மீது அவருக்கு அதிகப்படியான பற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கெளதம்மேனன் சொன்ன துருவ நட்சத்திரம் கதையும் போலீஸ் கதை என்பதால் உடனே ஓ.கே சொல்லியிருந்தார். ஆனால், கதையோட்டம் சூர்யாவுக்கு போதிய திருப்தியை தராததால் தொடர்ந்து கதை விவாதம் நடக்கிறதாம்.
இந்த நிலையில், அடுத்தபடியாக லிங்குசாமி இயக்கத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறாராம் சூர்யா. அப்படமும் போலீஸ் கதைதானாம். ஆனால், படம் முழுக்க போலீசாக வரவில்லையாம். முதல் பாகத்தில் டாக்டராக வரும் சூர்யா, அந்த மருத்துவத்துறையில் நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்களைக்கண்டு கொதித்துப்போய், பின்னர் ஐபிஎஸ் படித்து போலீசாகும் கேரக்டராம்.
அதன்பிறகு அவர் எப்படி சமூக விரோதிகளை அழிக்கிறார் என்பதுதான் அப்படத்தின் கதையாம். அந்த கதை சூர்யாவை வெகுவாக பாதித்துள்ளதால் கெளதம்மேனனுக்காக காத்திருக்க வேண்டாம் என்று அப்படத்தில் இறங்கி விட்டாராம். அதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிப்பது முடிவாகி விட்ட நிலையில், இன்னொரு பாலிவுட் நடிகை தேர்வும் நடைபெற்று வருகிறதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுஸ் மூலமாகவே இரண்டாவது இன்னிங்சையும் துவங்க ஆசைபடுகிறார் – தகதக தமன்னா..!
Next post ஏஞ்சலோ மெத்தியூஸ் திருமணப் பந்தத்தில் இணைந்தார்..!!