வாலிபருடன், மகளை பூட்டி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய, உடந்தையாக இருந்த தாய்..!!

Read Time:3 Minute, 3 Second

images (19)தஞ்சையில், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று, வாலிபருடன், தனியறையில், மகளை பூட்டி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய, உடந்தையாக இருந்த தாய் மற்றும் வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அருகே, அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மனைவி கோமதி, 37; இவர்களுக்கு, 13 வயதில் மகள் உள்ளார். இவர், அதே பகுதியில், அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த லட்சுமணன், 27, என்பவர், கோமதியிடம், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து, அவரது மகளை, திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு, கோமதி சம்மதம் தெரிவித்து உள்ளார். ஆனால், திருமணத்துக்கு, சிறுமி சம்மதிக்கவில்லை.

சிறுமியின் தாய் கோமதியும், லட்சுமணனும் சேர்ந்து, குறுக்கு வழியில், சிறுமியை சம்மதிக்க வைக்க, திட்டம் தீட்டினர். இதன்படி, 9ம் தேதி, தூத்துக்குடியில் இருந்து, மகளுக்கு தெரியாமல், லட்சுமணனை, தன் வீட்டுக்கு வரவழைத்து, ஒரு அறையில், தங்க வைத்துள்ளார். வலுக்கட்டாயமாக, மகளை, லட்சுமணன் இருந்த அறைக்குள் தள்ளி, கதவை பூட்டி உள்ளார்.

சிறுமியை, லட்சுமணன் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அறைக் கதவை, கோமதி திறந்து உள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அறையை விட்டு வேகமாக, வெளியே ஓடிய சிறுமி, அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம், நடந்ததைக் கூறி, கதறி அழுதுள்ளார்.

சிறுமியை, உறவினர்கள், தஞ்சை எஸ்.பி., தர்மராஜனிடம், அழைத்துச் ö சன்று புகார் கொடுத்தனர். பின், போலீசார், சிறுமியை, தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர்.

தஞ்சை மகளிர் போலீசார், வழக்குப் பதிவு செய்து, கோமதி, லட்சுமணன் ஆகிய இருவரையும்,நேற்று கைது செய்தார். தஞ்சை, கூடுதல் மாவட்ட நீதிபதி, பஷீர் அகமது முன்னிலையில், இருவரையும், நேற்று காலை போலீசார் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின், இருவரையும், ஆக., 1ம் தேதி வரை, சிறைக்காவலில் வைக்க, நீதிபதி பஷீர் அகமது உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யூடியூப்பில் தனுஷ், சிம்புவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்..!!
Next post தெஹி­வளை மிருகக் காட்சிசாலையில் 31 குட்டிகளை ஈன்ற அனெ கொண்டா..!!