சிறுவன் வரைந்த ஓவியம் ரூ.12 கோடிக்கு ஏலம்..!!
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 10 வயது சிறுவன் கியரான் வில்லியம்சன். இவன் அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் படிக்கிறான்.
இவன் ஓவியம் வரைவதில் திறமை பெற்றவன். தனது 5 வயதில் இருந்து ஓவியம் வரைந்து வருகிறான்.
இந்த நிலையில் அவன் வரைந்த ஒரு ஓவியம் இ–மெயில் மூலம் ரூ.12 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஓவிய ஏலத் தொகை ரூ.2 கோடி என நிர்ணயிக் கப்பட்டது.
ஆனால் அது ரூ.12 கோடிக்கு ஏலம் போனது. கடந்த வாரம் இவன் வரைந்த 23 ஓவியங்கள் ஏலத்தில் விடப்பட்டன. அவை அனைத்தும் 20 நிமிட நேரத்தில் ரூ.2 கோடிக்கு விற்று தீர்ந்தன.
அவன் வரைந்த ஓவியத்திலேயே தற்போது விற்பனை யான ஓவியம் தான் கூடுதல் விலைக்கு விற்பனை ஆகி உள்ளது. ஆனால் ஒரு ஓவியம் மட்டுமே ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கு மிக குறைந்த அளவு ஏலம் போனது. இதை வாட்டர் கலர் மூலம் மிகவும் எழிய முறையில் அவன் உருவாக்கி இருந்தான்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கியரான் ஓவியம் வரைய வில்லை. ஆர்வம் மிகுதியால் அவன் ஓவியம் வரைய தொடங்கினான். தற்போது அது பணம் சம்பாதித்து தருகிறது என அவனது தந்தை தெரிவித்தார்.
Average Rating