.மலாலா மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது – தலிபான்..!
சிறுவர்களின் கல்விக்காக குரல் கொடுத்த பாகிஸ்தானின் மலாலா யூசப்சாய் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டமை குறித்து தாம் அதிர்ச்சியடைவதாக பாகிஸ்தானில் உள்ள தலிபான்களின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மலாலாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தலிபான்களின் சிரேஷ்ட தலைவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பெண்களின் கல்விக்காக போராடியமைக்காக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படவில்லை என்றும், மலாலாவின் செயற்பாடுகள் தலிபான்களுக்கு எதிராக அமைந்திருந்தமையால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து எந்த வித கண்டனத்தையும் வெளியிடாத அவர், இந்த தாக்குதல் நியாயமானதா இல்லையா என்பது குறித்து கருத்து வெளியிடவில்லை. சர்வதேச சமூகத்தின் மதிப்பைப் பெற்ற மலாலா, அண்மையில் சிறுவர்களின் கல்வியின் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியிருந்தார். பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்ட மலாலா யூசப்சாய் பிரித்தானிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating