படப்பிடிப்பில் இடுப்பில் கிள்ளினார்?: சந்தானம் மீது சந்தியா எரிச்சல்..!
நடிகை சந்தியாவும் காமெடி நடிகர் சந்தானமும `யாயா’ படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். சந்தியா 2004-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய `காதல்’ படத்தில் நாயகியாக அறிமுகமானார். சிம்பு, ஜீவா, பரத், பிரிதிவிராஜ், ஷாம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதனால் வேறு வழியின்றி சந்தானம் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பின் இப்படம் மூலம் மீண்டும் அவர் தமிழுக்கு வருகிறார். ஆனால் படப்பிடிப்பில் சந்தியா இடுப்பை சந்தானம் கிள்ளி இம்சித்ததாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன.
காதல் காட்சிகளிலும் அத்துமீறி நடந்து கொண்டாராம். இதனால் சந்தானம் மீது சந்தியா எரிச்சல் பட்டார். கோபத்தில் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி கேரளா சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சந்தியாவை சமரசப்படுத்தும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளன
Average Rating