பெண் உட்பட மூன்று இலங்கையர்கள் பிரான்ஸில் கைது..!!

Read Time:1 Minute, 55 Second

download (1)மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 வயதான இலங்கை பெண்ணுக்கும், இலங்கை சேர்ந்த வேறு ஒருவருக்கும் இடையில் இருந்த உறவு காரணமாக பிறந்த குழந்தையை, குறித்த பெண் கொலைசெய்ய முயன்றுள்ளார்.

2010ம் ஆண்டு முதல் இந்த பெண், சம்பந்தப்பட்ட இலங்கை நபருடன் தொடர்புகளை கொண்டிருந்தார்.

அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதுடன், தான் இல்லாத நிலையில், குழந்தையை பராமரிக்க எவரும் இல்லை என்பதால் குழந்தையை உயிருடன் விட்டு வைக்க விரும்பாமல் கொலை செய்ய முயன்றுள்ளார்.

தற்கொலை முயற்சி தோல்வியடைந்த நிலையில், அவர் பாரிஸில் உள்ள சென்ட் லுயிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த பெண், பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நபர், பெண்ணின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பெண், கணவர் மற்றும் இலங்கை நபரின் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

கடும் தீக்காயங்கள் மற்றும் உடலுக்குள் காயங்களுடன் ஆபத்தான நிலைமையில் இருந்த குழந்தை, ஆபத்தான கட்டத்தில் இருந்து மருத்துவர்கள் மீட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை..!!
Next post இப்பவும் நயன்தாராவுக்கு ஒன்று என்றால் துடித்துப்போகிறாராம் ஆர்யா..!!