போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் மரணம்..!!
Read Time:1 Minute, 6 Second
ஸ்பெயின் நாட்டில் முர்சியா என்ற இடத்தில் உள்ளூர் திருவிழாவையொட்டி பீர் குடிக்கும் போட்டி நடந்தது. அதில் அப்பகுதியை சேர்ந்த கிரேசியா (45) என்பவர் கலந்து கொண்டார்.
அப்போது, அவர் 20 நிமிடத்தில் 6 லிட்டர் பீர் குடித்தார். அதைத்தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு தொகையும், வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது.
அதை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய அவரை ஆல்கஹால் விஷம் தாக்கியது. இதனால் வயிற்று வலியால் துடித்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். போட்டியில் வெல்வதற்கு குடித்த பீர் அவரது உயிரை பறித்துவிட்டது.
Average Rating