இலங்கை இளைஞனை கொலைசெய்த குற்றவாளிகள் கைது..!!

Read Time:1 Minute, 15 Second

122712236022நியூஸிலாந்தில் இலங்கை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ் இளைஞனது மரணம் தொடர்பில் கிறிஸ்ட் உயர் நீதிமன்றம் ஏழு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களை உள்ளடக்கிய ஜூரி சபையை அறிவித்திருந்தது.

இந்த ஜூரி சபையே கைது செய்யப்பட்டிருந்த துவன் பிரவேஸ் சவால் மற்றும் விராஜ் அல்ககோன் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது.

நியூஸிலாந்து ஒக்ஸ்போர்ட் பகுதி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 28 வயதான சமீர சந்திரசேன கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் மரணம்..!!
Next post பர்தா அணிந்த பெண்ணுக்கு அபராதம்: பிரான்சில் கலவரம்..!!