இப்பவும் நயன்தாராவுக்கு ஒன்று என்றால் துடித்துப்போகிறாராம் ஆர்யா..!!
ஆர்யா-நயன்தாராவுக்கிடையே பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பு ராஜா ராணி வரை பின்னி பிணைந்து கிடப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், இப்படியே போனால் தனது இமேஜ் கெட்டு விடும் என்று நினைத்த நயன்தாரா இப்போது ஆர்யாவுடன் வெளியிடங்களுக்கு ஜோடி போட்டு வருவதை குறைத்து விட்டார்.
அதேபோல், அவர் இருக்கும் ஸ்பாட்டுக்கு திடீர் திடீரென்று விசிட் அடிப்பதையும் நிறுத்தி விட்ட நயன்தாரா, அவருடனான சந்திப்பை தான் தங்கியிருக்கும் ஹோட்டலோடு நிறுத்திக்கொள்கிறாராம். சில முக்கியமான நாட்களில் ஆர்யாவின் வீட்டுக்கு சென்று குடும்பத்தாரோடு ஐக்கியமாகி விடுவாராம். ஆக, அவர்களுக்கிடையிலான நட்பு இன்னமும் தங்குதடையின்றி அரங்கேற்றமாகிக்கொண்டுதான் இருக்கிறது.
அதிலும், தற்போது ஆந்திராவில் முகாமிட்டுள்ள நயன்தாராவுக்கு ஒரு சிறிய தலைவலி என்பது ஆர்யாவின் காதுகளுக்கு வந்தாலே, துடித்துப்போகிறாராம். தனக்கு படப்பிடிப்பே இருந்தாலும்கூட இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஆந்திராவுக்கு பறந்து விடுகிறாராம். அப்படி செல்பவர் இரண்டொரு நாட்கள் அங்கு டேரா போட்டுவிட்டே சென்னைக்கு திரும்புகிறாராம்.
Average Rating