துருக்கி கப்பலில் இருந்த 24 இந்திய ஊழியர்கள் விடுதலை..!
Read Time:1 Minute, 0 Second
துருக்கி நாட்டை சேர்ந்த எம்.பி. காட்டன் என்ற எண்ணெய் கப்பல் கடந்த 15ம் தேதி 24 இந்திய கப்பல் ஊழியர்களுடன் ஆப்பிரிக்க கபான் கடற்கரையில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.
சுமார் 23 ஆயிரம் டன் எண்ணெய் ஏற்றிவரும் கொள்திரன் கொண்ட இந்த கப்பலில் 24 இந்தியர்கள் பணியாற்றி வந்தனர்.
கடத்தப்பட்ட பிறகு சுமார் 3 நாட்கள் வரை கப்பல் ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், கப்பலை தங்களின் கட்டுப்பாட்டில் இருந்து கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர்.
பணயத்தொகை தந்து கப்பல் விடுவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதில் அளிக்க கப்பல் நிறுவன அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
Average Rating