பூனையுடன் தான் உறவுகொண்டதை அறிந்ததால் முதியவரை கத்தியால் குத்த முயன்ற யுவதி..!!
யுவதியொருவர் பூனையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதுடன் இவ்விடயத்தை அறிந்த 72 வயதான நபரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
23வயதான கிறிஸ்டினா மைக்கல் பிரவுண் எனும் யுவதி, 72 வயதான எல்மர் மொரிஸன் எனும் தனது அயலவரை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.
மொரிஸனின் வீட்டுக்கு முன்னால் கத்தியுடன் நின்றுகொண்டு, மொரிஸனை வெளியில் வருமாறு கிறிஸ்டினா ஆவேசமாக கத்தினாராம். அதையடுத்து மேற்படி யுவதியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். எதற்காக 72 வயதான நபரை கத்தியால் குத்த முயற்சித்தீர்கள் என வினவப்பட்டபோது கிறிஸ்டினா தெரிவித்த பதில் பொலிஸாரை திகைக்க வைத்தது.
‘நான் பூனையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டேன். அது அனைவருக்கும் தெரியும்’ என அந்த யுவதி பதிலளித்துள்ளார்.
இந்த இரகசியத்தை தனது அயலவரான மொரிஸன்தான் ஊரிலுள்ளவர்களுக்கு பரப்பினார் என தான் நம்பியதால் அவரை கத்தியால் குத்த முயன்றதாக கிறிஸ்டினா கூறியுள்ளார்.
எனினும், கிறிஸ்டினா குறித்த இவ்வாறான விடயம் எதையும் தான் அறிந்திருக்கவில்லை என பொலிஸாரிடம் மொரிஸன் தெரிவித்துள்ளார்.
ஒக்லஹோமா மாநிலத்தின் ஒக்லஹோமா நகரில் வசிக்கும் கிறிஸ்டினா பிரவுண் தனது வீட்டில் பல நாய்களையும் பூனைகளையும் வளர்த்து வருகிறார். அவர் மொரிஸனை கத்தியால் குத்த முயன்றமை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating