வால் கொண்ட சிறுவனை கடவுளாக கருதும் மக்கள்..!
Read Time:1 Minute, 20 Second
இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிறுவனொருவனின் முதுகில் வால் போன்ற அமைப்பு காணப்படுவதால் அச்சிறுவனை மக்கள் கடவுளாக ஆராதித்தி வருகிறார்கள்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள சண்டிகார்ஹ் நகருக்கு அண்மையில் தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் பாலாஜி என்ற 12 வயது சிறுவனையே மக்கள் இவ்வாறு கடவுளாக பூஜிக்கிறார்கள்.
இச்சிறுவனை அனுமனின் மறுபிறப்பாக நம்பும் பக்தர்கள் பலர் அடிக்கடி பாலாஜியை தரிசித்து ஆசி பெறுவதுடன் பணம் மற்றும் பரிசுகளையும் வழங்கிச் செல்கின்றனர்.
‘எனது வாலை நான் விரும்புகிறேன். அது கடவுளிடமிருந்து எனக்கு கிடைத்த பரிசு. இது வித்தியாசமாகவுள்ளது இருந்தாலும் இந்த வாலின் காரணமாக மக்கள் என்னை மதித்து வணங்குகிறார்கள். நான் இதனை விஷேடமாக உணர்கிறேன்’ என பாலாஜி கூறியுள்ளான்.
Average Rating