கரவெட்டியில் சிவிலுடை தரித்தோர் வீடு புகுந்து கடும் தாக்குதல்..!!

Read Time:1 Minute, 39 Second

download (11)யாழ் வடமராட்சி பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த சிவில் உடை தரித்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் வயோதிபர் ஒருவர் உட்பட இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமாலை 4 மணியளவில் கரவெட்டி இராஜசிங்கம் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வின்போது அந்த வீட்டின் உள்ளே நுழைந்த சிவிலுடை தரித்தோர் அங்கு நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இன்னொரு இளைஞரை நிர்வாணப்படுத்தி ஆண் உறுப்பில் தாக்கியுள்ளனர். அதனை அவரது பேத்தியார் தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட சாதனங்களையும் அடித்து நொருக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலில் மோகன் நிரோசன் (வயது 21) இராசேந்திரம் சிவப்பி (வயது 67) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் பிரபல வர்த்தக நிறுவனத்தில் துணிகரக் கொள்ளை..!!
Next post என்னால முடியலங்கை.. மாடி ஏற முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் ‘குண்டர்..!