வவுனியாவில் பிரபல வர்த்தக நிறுவனத்தில் துணிகரக் கொள்ளை..!!

Read Time:1 Minute, 32 Second

download (12)வவுனியா நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் சுவர்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு 10மணியளவில் சுவரை உடைத்துக் கொண்டு சென்ற கொள்ளையர்கள் அதிகாலை 3 மணிவரையில் உள்ளே இருந்ததாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்ற பொலிசார், சம்பவம் நடைபெற்ற கடைக்கு அடுத்த கடையில் பணியாற்றுபவர்களை விசாரணைக்கு உட்படுத்தியு;ளளனர்.

கொள்ளையிடப்பட்ட வர்த்தக நிறுவனம் வவுனியா நகரில் பழைமை வாய்ந்தது என்பதுடன், பொலிஸ் நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தின் பெறுமதி பல லட்சங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பந்தயத்தில் தோல்வியடைந்து உள்ளாடையுடன் பயணிக்க முற்பட்டவர் கைது..!!
Next post கரவெட்டியில் சிவிலுடை தரித்தோர் வீடு புகுந்து கடும் தாக்குதல்..!!